சீனாவை வென்றது இந்தியா.

நேற்று 3030 வருடத்திற்கு சென்று இருந்தேன்! அங்கே என் சந்ததிகளில் ஒருவன் 7ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். அவன் வரலாற்று புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் இருந்து சில பக்கங்கள்!

அந்த பக்கத்தின் தலைப்பு சீனாவை வென்றது இந்தியா! அப்படியா என்று வியப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்! ப்பூ இது நடக்காது என்று நினைப்பவர்கள் கட்டாயம் படியுங்கள், இது எப்படி நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்வீர்கள்!

சீனாவை வென்றது இந்தியா!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவில் ஒரு மாபெரும் தலைவரின் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது! அவர் எல்லோராலும் இரண்டாம் துக்ளக் என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர் முதலாம் துக்ளக்கைவிட அறிவிலும் திறமையான முடிவுகள் எடுப்பதிலும் வித்தகர்.

சீன யுத்தத்திற்கு முன்னமே அவர் மிக பிரபலமாக இருந்தார். பாகிஸ்தான் மீது அவர் நடத்திய யுத்தமே அதற்கு காரணம்! அவர் தன்னுடைய விமானங்களை, மேகங்களில் மறைத்து ஓட்டிச் செல்ல வைத்தார். எதிரிக்கு தெரியாமலேயே ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட மரங்கள் கொண்ட காட்டை அழித்தார். 

எதிரிக்கு அவருடைய சாணக்கிய தனம் புலப்படவில்லை. ஏன், நிறைய இந்துயர்கள்கூட அவரின் எண்ணங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. மரங்கள் இல்லாததால், பாகிஸ்தானிற்கு கிடைக்க வேண்டிய மழை கிடைக்கவில்லை! தண்ணீர் இல்லாத பாகிஸ்தான், இந்தியாவிடம் வந்து தண்ணீர் தண்ணீர் என்ற கெஞ்ச வைத்த பெரும் தலைவர் அவர்! ஈடு இணையற்ற பெரும் தலைவர் இரண்டாம் துக்ளக் என்று தான் எல்லோரும் துதி பாடுவார்கள்!

அவருக்கு பட்டம் கூட கொடுத்தார்கள். 'நாற்பது வீரர்க்ளை கொடுத்து நானூறு மரம் சாய்த்த மாவீரர்' என்று!

சரி, சீன யுத்தத்திற்கு வருவோம்!

செங்கிஸ் கானோ அல்லது நெப்போலியனோ இந்த யுத்ததை பார்த்திருந்தால், ஆச்சரியத்தில் முழ்கிப்போய் இருப்பார்கள். இப்படியும் செய்ய முடியுமா? என்று மூக்கின் மீது விரல் வைத்து இருப்பார்கள்!

நடந்தது இதுதான்.

சீனா, போர் ஆரம்பிக்கும் முன்னே ஒரு கிருமியை இந்தியாவிக்குள் அனுப்பி வைத்தது. அவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட பெருந்தலைவர் துக்ளக், உடனடியாக செயலில் இறங்கினார்!

அத்தனை இந்தியர்களையும் வீட்டுக்குள்ளேயே இருக்க சொன்னார். அவருக்கு தெரியும். இந்திய மக்களுக்கு இயற்கையாகவே உடல் எதிர்ப்பு அதிகம். இந்த கிருமிகள் ஒன்றும் செய்யது. அதுவும் இந்தியாவிடம், எல்லாவற்றையும் வென்ற வேத அறிவியல் வேறு உண்டு! எந்த கிருமியாக இருந்தாலும் அதற்கு மாற்று மருந்து 3000 வருடங்களுக்கு முன்னமே கண்டு பிடிக்கப்பட்டு இருந்தது!

அதனால், துக்ளக் ஒரு சூழ்ச்சி செய்தார்! வீட்டிலேயே இருந்தால், உடற்பயிற்சி சரியான உணவு இது எல்லாம் இல்லாமல் மக்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும். அப்போழுது, கிருமி மக்கள் மத்தியில் நன்றாக பரவும்! அதுதானே அவருக்கு வேண்டும், சீனர்களின் போரை முறியடிக்க!

அது மட்டுமல்ல, மக்கள் வேலைக்கு செல்லாததால், உற்பத்தி குறைந்து, வருமானம் இல்லாமல் மக்கள் வாடினார்கள்! பசியால் இறந்தார்கள். பணம் இல்லாத நாட்டில் எதை கொள்ளை அடிக்க முடியும்?

பெருந்தலைவர் துக்ளக் அப்பொழுது டிவியில் வந்தார். 'அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! எனக்கு தெரியும் நீங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிறீர்கள் என்று. ஏனென்றால், நானும் உங்களை போன்று ஏழ்மையில் பிறந்தவன் தான். ஒரு டீக்கடைக்காரன் நான்', என்று தொடங்கி, அதற்கு மேலும் தொடர்ந்தார்.

'இந்த நாடு என்றும் தோற்க கூடாது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நாடாக இருக்கட்டும்' என்றார். எல்லோரும், எங்கள் உயிரைகூட கொடுப்போம் என்றார்கள்!

நாட்டுக்காக உயிரை கொடுப்பதுதானே தேசபக்தி? ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று சிலர் வியாதியின் கொடுமையால் மாண்டு போனார்கள். மேலும் பலர், பணம் இல்லாமல் பசியால் மாண்டு போனார்கள். சிலர் தற்கொலை செய்து கொண்டு செத்துப்போனார்கள். மீதம் இருந்தவர்கள் பணம் எல்லாம் தொலைத்துவிட்டு பரம் ஏழைகளாக, பலம் இல்லாத எதிர்த்து பேச முடியாத நோன்ஜான்களாக இருந்தார்கள். எங்கும் ஏழ்மை, பசி, வேதனை!

இப்பொழுது இந்தியாவின் நிலையை அறியாத சீனா, படை எடுத்து வந்தது. யார் இருக்கிறார் எதிர்த்து போரிட? இந்தியா முழுவதும் சீனப் படைகள் வியாபித்தன!

சீன வீரர்கள் கொள்ளை அடிக்கலாம், எரித்து சாம்பலாக்கலாம் என்ற எண்ணத்துடன் நுழைந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்! இந்திய மக்கள் இருந்த நிலை பரிதாபமாக இருந்தது! இவ்வளவு வேதனையை பார்த்திராத சீன வீரர்கள் பார்த்த இடத்திலேயே உயிரை விட்டார்கள்! மீதம் இருப்பவர்கள் இந்தியாவை விட்டு ஒரே ஓட்டமாக ஓடி போனார்கள், சீனாவிற்கு! ஓடி போனவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் வேறு ஒட்டிக் கொண்டது!

இனிமேல் இந்தியாவிற்குள் வருவீர்களா? என்று சத்தம்மிட்டு விரட்டினார் பெருந்தலைவர் இரண்டாம் துக்ளக்.

அது மட்டுமல்ல! சர்வதேச நீதிமன்றத்தில், லட்ச கண்க்கான மக்களின் சாவிற்கும் பல லட்ச கோடி ரூபாய் நஷ்டத்திற்கும் சீனா தான் காரணம் என்றும், இந்த நஷ்டத்தை சரி செய்ய அவர்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார். இந்தியாவிற்கு நஷ்ட ஈடும் வாங்கி கொடுத்தார்!

இப்படியாக சீனாவை வெற்றி கண்டார் நம் துக்ளக்!

(சொல்லத்தேவை இல்லை, இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். இது முழுமையும் கற்பனையே! இது யாரை பற்றியும் இல்லை. ஒருவேளை இது இன்னாரை பற்றியது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் குற்றம், என்னுடையது அல்ல).

India or China: Whom Did Israel Support During The Intense India-China  Border Standoff?

Comments

Popular posts from this blog

Krishna's Curse

நுண் அண்டம் (சிறு கதை)

Black Tax Economy